போளூரில் திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலர் பி.அர்ச்சுனன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜி.வெங்கடேசன், மாவட்டச் செயலர் ஆ.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி ஜோதிமணி வரவேற்றார்.
கூட்டத்தில், தொடக்கக் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு ஆணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன், நகைக்கடனுக்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க நிர்வாகிகள் மீனாட்சிசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, எத்திராஜ், குணசேகரன், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் மாசிலாமணி நன்றி கூறினார்.