செய்யாறில் அருள்ஞானப் பெருவெளி மன்றம் சார்பில், நூறாயிரம் போற்றிப் பெருவிழா திங்கள்கிழமை (பிப்ரவரி 18) நடைபெறுகிறது.
செய்யாறு வழூர்ப்பேட்டையில் அமைந்துள்ள பட்சீசப் பெருமான் கோயிலில் அம்பலவாணப் பெருமானுக்கு (நடராஜர்) சதுர்த்தசி திதியில் சிறப்பு திருமுழுக்காட்டும் ஒரு நாள் நூறாயிரம் போற்றிப் பெருவிழா நடைபெற உள்ளது.
தொடர்ந்து 22-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் காஞ்சி கிளை மடம் தவத்திரு.சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் தலைமை வகிக்கிறார்.
சிவம்பெருக்கும் சீலர் முனைவர் புரிசை.ச.நடராசன் போற்றிப் பெருவிழாவைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இதனைத் தொடர்ந்து, கோயில் சிவாச்சாரியார் தலைமையில் பக்தர்கள் தாமே தமிழில் போற்றிசைத்தும், அர்ச்சனை செய்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.