போளூரை அடுத்த குருவிமலை அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கலசப்பாக்கம் ஒன்றியம், கேட்டவரம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியை வே.ஆஞ்சலா மற்றும் ஆசிரியர்கள் பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
பின்னர், குருவிமலை, கேட்டவரம்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள் கற்றல் திறன் குறித்த கண்காட்சியை அமைத்தனர். இதில், சிறந்த அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்த மாணவர்களுக்கு குருவிமலை பள்ளித் தலைமை ஆசிரியை வே.ஆஞ்சலா பரிசு வழங்கினார். இதில், வட்டாரக் கல்வி அலுவலர் மோகன், ஆசிரியர் பயிற்றுநர் பாஸ்கரன், ஆசிரியர்கள் ராஜேந்திரன், ஜெயந்தி, ராதா,
பிரிஸில்லா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.