ஆரணி எல்லையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
கலசப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆரணி வழியாகச் சென்றபோது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பூங்கொத்து அளித்து அவரை வரவேற்றார். மேலும், மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
உடன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், அரசு வழக்குரைஞர் க.சங்கர், வேலூர் ஆவின் பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாரிபாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், வேலு, நகரச் செயலர் அசோக்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.