செய்யாறில் இன்று சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

செய்யாறில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்  வெள்ளிக்கிழமை (பிப்ரவரி  22) நடைபெற உள்ளது.

செய்யாறில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்  வெள்ளிக்கிழமை (பிப்ரவரி  22) நடைபெற உள்ளது.
செய்யாறு கோட்ட அளவிலான சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. செய்யாறு கோட்டாட்சியர் ஆர்.அன்னம்மாள் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், இண்டேன் சமையல் எரிவாயு அலுவலர்கள், செய்யாறு, சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விநியோக அலுவலர்கள் மற்றும் கோட்டத்தைச் சேர்ந்த சமையல் எரிவாயு விநியோகஸ்கர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.எனவே, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு வட்டங்களைச் சேர்ந்த சமையல் எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு சம்பந்தமான குறைபாடுகளை நேரடியாகவும் அல்லது புகார் மனுவாகவும் அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com