செய்யாறு அருகே கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன் வசித்து வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
வந்தவாசி வட்டம், உளுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (33). இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக நிர்மலாவை பிரிந்து கன்னியப்பன் அப்துல்லாபுரம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். நிர்மலா செய்யாறு தொழில்பேட்டையில் உள்ள காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கணவரை பிரிந்த மன வேதனையில் இருந்து வந்த நிர்மலா, புதன்கிழமை விஷம் குடித்து வீட்டில் மயக்க நிலையில் கிடந்ததார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
எனினும், அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.