திருவண்ணாமலை

துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

DIN


திருவண்ணாமலையில் மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில், காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற மெளன ஊர்வலத்துக்கு அந்தக் கட்சியின்  நகரச் செயலர் ஜி.அக்பர் பாஷா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் காஜா ஷெரீப், துணைச் செயலர் எஸ்.ஏ.பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டப் பொருளாளர் சையது முஸ்தபா வரவேற்றார். 
அறிவொளிப் பூங்கா எதிரே இருந்து தொடங்கிய மெளன ஊர்வலம் மத்திய பேருந்து நிலையம், ரவுண்டானா, மத்தலாங்குளத் தெரு, பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை, சின்னக்கடை தெரு வழியாகச் சென்று மீண்டும் பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள், காஷ்மீரில் வீர மரணம் அடைந்த துணை ராணுர வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT