திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் போகிப் பண்டிகை தினமான திங்கள்கிழமை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, செல்கின்றனர். விடுமுறை, பண்டிகை தினங்களில் இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அதன்படி, போகிப் பண்டிகை தினமான திங்கள்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால், வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கோயிலில் திரண்டனர். பொது தரிசன, கட்டண தரிசன வரிசைகளில் நீண்ட நேரமாக பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.