தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 வெம்பாக்கம் வட்டம், பில்லாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (39). இவர், செய்யாறு தொழில்பேட்டையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
 பொங்கல் பண்டிகையையொட்டி, இவரது வீட்டில் கடந்த ஓர் வாரமாக வர்ணம் பூசும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி நாராயணனின் மனைவி உமா, பீரோவிலிருந்த நகைகளை சரிபார்த்தாராம்.
 அப்போது, சுமார் 7 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாராயணன் அளித்த புகாரின்பேரில், தூசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com