திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் 44 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், திருவண்ணாமலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான வளாக நேர்காணல் அண்மையில் நடைபெற்றது. சென்னை பாடி பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில், நடைபெற்ற வளாக நேர்காணலில் இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவ-மாணவிகள் 76 பேர் கலந்து கொண்டனர்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதம் உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 44 பேருக்கான பணி நியமன ஆணைகளை கல்லூரித் தலைவர் ஆர்.குப்புசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குநர் வி.ராஜா, முதல்வர் டி.சர்வேசன், இயந்திரவியல் துறைத் தலைவர் ஏ.ராஜா, கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி ஏ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.