மாமனார் அடித்துக் கொலை: மருமகன் கைது

கடலாடியை அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் மாமனாரை அடித்துக் கொலை செய்ததாக மருமகனை போலீஸார் கைது செய்தனர்.

கடலாடியை அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் மாமனாரை அடித்துக் கொலை செய்ததாக மருமகனை போலீஸார் கைது செய்தனர்.
 கடலாடியை அடுத்த கீழ்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த மாரி மகன் சிவக்குமார் (47). இவருடைய மகள் கவிதாவை அதே ஊரைச் சேர்ந்த பிரகாஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு ஓர் குழந்தை உள்ளது.
 பிரகாஷ் தனது மனைவி கவிதாவுடன் சென்னையில் வேலை செய்து வந்தார். பொங்கல் பண்டிகைக்காக இருவரும் கீழ்பாலூர் கிராமத்துக்கு வந்தனர். இந்த நிலையில், கவிதா தனது தாய் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். எனினும், அவர் கணவர் வீட்டுக்கு திரும்பிச் செல்ல தாமதமானதால், அவரைத் தேடி மாமனார் வீட்டுக்கு பிரகாஷ் சென்றார்.
 அப்போது, அவருக்கும், சிவக்குமார், அவரது மனைவி மல்லிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, சிவக்குமார், மல்லிகா ஆகியோரை அருகிலிருந்த கட்டையால் பிரகாஷ் தாக்கினாராம்.
 இதனால், பலத்த காயமடைந்த சிவக்குமாரை உறவினர்கள் போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மல்லிகா úôளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், கடலாடி போலீஸார் வழக்குப் பதிந்து பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com