முன்விரோதத் தகராறு: ஒருவர் கைது

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 வந்தவாசியை அடுத்த கொடநல்லூரைச் சேர்ந்த சகோதரர்கள் ரமேஷ் (42), ரஜினி (38). இவர்கள் இருவருக்கும் சொந்தமான நிலத்துக்கு அருகில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவது தொடர்பாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
 இந்த நிலையில், ரஜினிக்கு ஆதரவாக அவரது மைத்துனர் அரசு (32), ரமேஷை ஞாயிற்றுக்கிழமை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில், காயமடைந்த ரமேஷ், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், அரசு மீது வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com