கரும்பு வியாபாரியை தாக்கியவர் கைது

திருவண்ணாமலை அருகே கரும்பு வியாபாரியைத் தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை அருகே கரும்பு வியாபாரியைத் தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த கோசாலை பகுதியைச் சேர்ந்த கரும்பு வியாபாரி வைத்தியநாதன் (32). இவர், பொங்கல் பண்டிகையையொட்டி, காஞ்சி சாலையில் புதன்கிழமை கரும்பு விற்பனை செய்துகொண்டிருந்தார். 
அப்போது, அங்கு வந்த ஆடையூரைச் சேர்ந்த காண்டீபன், அவரது மகன் முரளி ஆகியோர் கரும்பு வாங்க பேரம் பேசினராம்.
இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காண்டீபன், முரளி ஆகியோர் சேர்ந்து வைத்தியநாதனைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து காண்டீபனை (52) கைது செய்தனர். தலைமறைவான முரளியைத் தேடி 
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com