பாரத பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பப் பெண்களுக்கு இலவச அடுப்புடன்கூடிய சமையல் எரிவாயு உருளை வழங்கும் நிகழ்ச்சி கலசப்பாக்கத்தை அடுத்த பட்டியந்தல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தனியார் சமையல் எரிவாயு உருளை விநியோக நிறுவன உரிமையாளர் ரமணிபாய் கலந்துகொண்டு, சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் முறை குறித்த கேள்வி, பதிலுக்கு சரியாக பதிலளித்த தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், விறகு வைத்து அடுப்பு எரித்தல், சமையல் எரிவாயு வைத்து அடுப்பு எரித்தல் போட்டிகள் பெண்களிடையே நடத்தப்பட்டன. இதில், எரிவாயு உருளை விநியோக நிறுவன மேலாளர் சத்தியன் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.