பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயம் அளிப்பு விழா

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 7-ஆவது பட்டயம் அளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 7-ஆவது பட்டயம் அளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு கல்லூரித் தலைவர் எஸ்.வெங்கடாசலபதி தலைமை வகித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், அம்பிகாபதி, புனிதாபாலகிருஷ்ணன், திலகவதிரவிக்குமார், ரேவதிசுந்தரமூர்த்தி, ஐஸ்வரியாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பரிமளாஜெயந்தி வரவேற்றார்.
 சிறப்பு அழைப்பாளராக தமிழக ரயில்வே டிஜிபி சி.சைலேந்திரபாபு கலந்துகொண்டு 222 மாணவர்களுக்கு பட்டயமும், மத்திய அரசின் சூர்யமித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும், வாரியத் தேர்வில் மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 95 மாணவர்களுக்கு ரூ. 3 லட்சத்து 34 ஆயிரம் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார். மேலும், பட்டயம் பெற்ற மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி அவர் பேசினார். இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். விரிவுரையாளர் ரூபி நன்றி கூறினார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com