உலக மகளிர் தின விழா

திருவண்ணாமலை புதிய பார்வை அறக்கட்டளை சார்பில், உலக மகளிர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை புதிய பார்வை அறக்கட்டளை சார்பில், உலக மகளிர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு சமூக ஆர்வலர் மீரா.சின்ராஜ் தலைமை வகித்தார். கவிஞர் லதா பிரபுலிங்கம் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் ரமாதேவி நெடுஞ்செழியன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூ.மாது, எழுத்தாளர் ஜீவா அசோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 விழாவில், சிறந்த மகளிராக தேர்வு செய்யப்பட்ட 19 பேருக்கு பேராசிரியர் தேவி செந்தில்குமார் விருது, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியர் வரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com