திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான 2-ஆம் நாளான புதன்கிழமை ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெறப்படுகின்றன.
இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனிதன் (50) வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், 2-ஆம் நாளான புதன்கிழமை திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.