எரிசாராயம்  பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது

ஆற்காடு அருகே கடத்துவதற்காக எரிசாராம் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆற்காடு அருகே கடத்துவதற்காக எரிசாராம் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வாலாஜாபேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் போலீஸார் ஆற்காட்டை அடுத்த கத்தியவாடி பகுதியில் விவசாய நிலத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். 
அதில், அவர்கள் ஆற்காட்டை அடுத்த கீழ்விஷாரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (48), தவமணி (28), ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த கோபி (47), வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (48), ஆற்காட்டை அடுத்த கருங்காலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (24) என்பதும், இவர்கள் ஆற்காடு புறவழிச் சாலையில் உள்ள மெக்கானிக் கடையில் நிறுத்தி வைத்திருந்த வேனில் ரசசிய அறை அமைத்து, அதில் கேன்களில் எரிசாராயம் கடத்திச் செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.  இதையடுத்து அவர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 14 கேன்களில் பதுக்கி வைத்திருந்த 500 லிட்டம் எரிசாராயம் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com