ஆம்பூர் அருகே கார் மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
குடியாத்தத்தில் இருந்து கார் ஒன்று பெங்களூரு நோக்கிச் சென்றது. ஆம்பூர் அருகே வெங்கிளி கிராமம் அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் வந்துள்ளது. எதிர்பாராத விதமாக அதன் மீது கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பேர்ணாம்பட்டு வட்டம், ராசம்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சத்தியமூர்த்தி (38) பலத்த காயமடைந்தார். அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.