3 மாநில பேரவைத் தேர்தலில் வெற்றி: காங்கிரஸார் கொண்டாட்டம்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை நிலவரம் வெளியானதையொட்டி, ஆம்பூரில் காங்கிரஸ்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை நிலவரம் வெளியானதையொட்டி, ஆம்பூரில் காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
 சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, ஆம்பூரில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.சரவணன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.   வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளர் கொத்தூர் மகேஷ், நிர்வாகிகள் சமியுல்லா, சங்கர், மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


வாணியம்பாடியில்...
வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா தலைமை வகித்து, இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். 
இதில், மாவட்ட இளைஞரணித் தலைவர் பைசல் அமீன், மாநில ஒருங்கிணைப்பாளர் பரீத் அஹமத், சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் முதஸ்சீர் பாஷா, நிர்வாகிகள் கவியரசன், சலாவுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com