ஜோலார்பேட்டை அருகே பைக் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி சந்திரா (50). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு ரெட்டியூர் கூட்டுச் சாலை அருகே சாலை கடந்தபோது, அவ்வழியாகச் சென்ற பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சந்திராவை அங்கிருந்த பொதுமக்கள் திருப்பத்தூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, சந்திராவின் மகள் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து,
விசாரித்து வருகின்றனர்.