ஜோலார்பேட்டை அருகே குடியானகுப்பத்தில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஊர் நாட்டாண்மை மகாலிங்கம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டார். அதிமுக நகரச் செயலர் எஸ்.பி.சீனிவாசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வசுமதி சீனிவாசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ரமேஷ், நகர துணைச் செயலர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.