திமுக ஆலோசனைக் கூட்டம்

ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் குறித்து திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் குறித்து திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி தலைமை வகித்தார். ஆம்பூர் நகரச் செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் வரவேற்றார். மாநில மருத்துவர் அணி நிர்வாகி மஸ்தான், ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி ஆகியோர் பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தொண்டர்கள், ஆம்பூர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும். இத்தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கக் கூடாது. திமுகவை சேர்ந்தவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். 
இதுவரை கூட்டணிக் கட்சிக்குதான் தொகுதி ஒதுக்கப்பட்டு வருகிறது. எனவே தொகுதியில் வெற்றி பெற வேண்டுமானால் திமுகவுக்கு இத்தொகுதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கூட்டத்தில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி,  முன்னாள் எம்.பி. முகமது சகி, முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.ஆனந்தன், ஒன்றியச் செயலாளர்கள் சுரேஷ்குமார்,  ஏ.சி.வில்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com