குடியாத்தம் பட்டாபிராமர் கோயில் அறக்கட்டளை, தெலுகு சேனியர் குலஸ்துல சங்கம் ஆகியவை இணைந்து ஜி.பி.எம் தெருவில் உள்ள பட்டாபிராமர் கோயிலில் சோமேஸ்வரர் பூஜையை திங்கள்கிழமை நடத்தின.
இதையொட்டி, வணிகர் வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து கலச ஊர்வலம் தொடங்கி, பட்டாபிராமர் கோயிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன. பொதுமக்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழு நிர்வாகிகள் ஜீவானந்தம், ஏ.கே.பிரகாசம், சீனிவாசலு, ராஜுலு, எஸ்.புருஷோத்தமன், மோகன், குணசேகரன், எஸ். வெங்கடேசன், கஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.