திருப்பத்தூரில் பேருந்தில் திருடியதாக இரு பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூரை அடுத்த காரப்பட்டு அருகே உள்ள ஊமையனூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (44). இவர் சனிக்கிழமை திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறினார். அப்போது, அவருடைய பையிலிருந்த பர்ஸ் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பேருந்தில் இருந்த பயணிகள் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த இரு பெண்களிடம் விசாரித்ததில், அவர்கள் பர்ஸை திருடியது தெரியவந்தது.
தகவலறிந்த திருப்பத்தூர் நகர போலீஸார் அங்கு சென்று இரு பெண்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், அரூரைச் சேர்ந்த மனோரஞ்சிதம் (40), ஒசூரைச் சேர்ந்த சரோஜா (35) என்பது தெரியவந்தது. மேலும், பர்ஸில் இருந்த ரூ. 1,100-ஐ போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து,திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர்.