ஒலிக்குறிப்பு மாறாமல் ஊர்ப்பெயரை ஆங்கிலத்திலும் அமைக்க கருத்துக் கேட்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊர்ப் பெயர்களை ஒலிக்குறிப்பு மாறாமல் ஆங்கிலத்திலும் அமைத்திட

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊர்ப் பெயர்களை ஒலிக்குறிப்பு மாறாமல் ஆங்கிலத்திலும் அமைத்திட பொதுமக்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என்று தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2018-19ஆம் ஆண்டுக்கான சட்டப்
பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஜூன் 13-ஆம் தேதி நடைபெற்ற மானியக்கோரிக்கையின்போது, தமிழகத்திலுள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப் படும் என்று  தொல்லியல் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி, தற்போதுள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அதன் ஒலிக்குறிப்பு மாறாமல் அமைத்திட (உதாரணமாக, தமிழில் திருவல்லிக்கேணி என்ற ஊர் ஆங்கிலத்தில் ட்ரிப்ளிக்கேன் என உச்சரிக்கப்படுவதை மாற்றி திருவல்லிக்கேணி என்று அமைத்திட) ஆவணங்கள் அடிப்படையிலும், ஊர்ப் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, வேலூர் மாவட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேலூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம். மாற்றப்பட வேண்டிய ஊர்ப் பெயர்களின் பட்டியல்கள், ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவின் பரிந்துரையின்பேரில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு அனுப்பப்படும். பரிந்துரை செய்யப்படும் ஊர்ப் பெயர்கள், அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் குழுவால் ஏற்கப்பட்டு உரிய ஆணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com