மாவட்டம் முழுவதும் கூட்டுறவு வார விழா இன்று தொடக்கம்

கூட்டுறவு வார விழா வேலூர் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை தொடங்குகிறது. தொடர்ந்து வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

கூட்டுறவு வார விழா வேலூர் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை தொடங்குகிறது. தொடர்ந்து வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக வேலூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் க.ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பு:  அனைத்திந்திய 65ஆவது கூட்டுறவு வார விழா வேலூர் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன்படி, புதன்கிழமை அனைத்து கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வாரவிழா கொடியேற்றுதல், மரம் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் வியாழக்கிழமை கண் சிகிச்சை முகாமும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வெள்ளிக்கிழமை பொது மருத்துவ முகாமும் நடைபெறுகின்றன. 
மேலும், வேலூர் தண்டபாணி முதலியார் மஹாலில் சனிக்கிழமை நடைபெறும் கூட்டுறவு வார விழாவில் தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் ஆகியோர் பங்கேற்கின்றனர். அணைக்கட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை கால்நடை சிகிச்சை முகாம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் திங்கள்கிழமை திறன், தொழில்நுட்ப மேம்பாட்டு கருத்தரங்கம், குடியாத்தம் கூட்டுறவு நகர வங்கியில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் ஆகியவை நடைபெற உள்ளன.
இந்நிகழ்ச்சிகளில் அனைத்து கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், சங்கச் செயலர்கள், உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com