சிறைக் கைதிகளுக்கு யோகா பயிற்சி

வேலூர் மத்திய சிறைக் கைதிகளுக்கு 3 நாள்கள் யோக பயிற்சி அளிக்கப்பட்டது.


வேலூர் மத்திய சிறைக் கைதிகளுக்கு 3 நாள்கள் யோக பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈஷா யோகா மையம் சார்பில், கடந்த புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை இந்த பயிற்சியை அளிக்கப்பட்டது. இதில், 76 கைதிகள் பங்கேற்று யோகா பயிற்சி பெற்றனர். இதில், சிறைக் கைதிகளின் உடல், மன ரீதியான பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தம், உடல்நலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இப்பயிற்சியை சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தொடங்கி வைத்தார். சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com