திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துக்கான அடங்கல் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழை நடைபெற்றது.
முகாமிற்கு, வட்டாட்சியர் டி.எஸ்.சத்தியமூர்த்தி தலைமை வகித்து, 109 பயனாளிகளுக்கு பயிர்க் காப்பீடுத் திட்ட அடங்கலும், 33 சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றுகளும் வழங்கினார்.
இதில், மண்டல துணை வட்டாட்சியர் பத்மநாபன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் நவநீதம், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.