ஆற்காடு நகர அதிமுக சார்பில் கட்சியின் 47-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலாளர் எம்.சங்கர் தலைமை வகித்தார். நகர துணைச் செயலாளர் ஏ.கே. சத்தார் பாஷா, மாவட்டப் பிரதிநிதி ஏ,ஜி .பிச்சைமுத்து, கணியம்பாடி ஒன்றியச் செயலாளர் ராகவன், வட்டச் செயலாளர் ஆட்டோ கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டப் பிரதிநிதி சுரேஷ் வரவேற்றார். இதில், வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், அரக்கோணம் தொகுதி எம்எல்ஏவுமான சு.ரவி பேசியதாவது: இருபது தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும், கஜா புயல் முன்னெச்சரிக்கைப் பணிகளை அனைத்து தலைவர்களும் பாராட்டியுள்ளனர் என்றார்.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், பேச்சாளர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளர் சுமைதாங்கி
சு.ஏழுமலை, மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபால், மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.ரமாபிரபா, மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் கே.அப்துல்லா, மகளிர் அணி செயலாளர் எம்.ராதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.