பேர்ணாம்பட்டு அருகே போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பேர்ணாம்பட்டை அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (24). இவர், அதே பகுதியைச் சேர்ந்த அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவியை கடந்த சில நாள்களுக்கு முன் கடத்திச் சென்று, கோயிலில் திருமணம் செய்து கொண்டாராம். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட பேர்ணாம்பட்டு போலீஸார், பிரகாஷை திங்கள்கிழமை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறைக் காவலுக்கு அனுப்பினர்.