மாடியில் இருந்து தவறி விழுந்து கடை உரிமையாளர் சாவு

அரக்கோணம் அருகே மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து மின் பொருள் கடை உரிமையாளர் திங்கள்கிழமை இறந்தார்.

அரக்கோணம் அருகே மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து மின் பொருள் கடை உரிமையாளர் திங்கள்கிழமை இறந்தார்.
அரக்கோணத்தை அடுத்த கைனூர், ஜெயந்தி நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (37). இவர், அரக்கோணம் தாசில்தார் தெருவில் மின் பொருள் விற்பனையகம் நடத்தி வந்தார். கடந்த 18-ஆம் தேதி அசோக்குமார் வீட்டு மாடிக்கு அருகே இருந்த கொடியில் இருந்த பூவைப் பறிக்க முயன்றாராம். அப்போது, திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த அசோக்குமார் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு அசோக்குமார் திங்கள்
கிழமை இறந்தார். இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அசோக்குமாருக்கு திவ்யா (30) என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com