வியாபாரி வீட்டில் ரூ. 10 பவுன் நகை திருட்டு

காட்பாடியில் வியாபாரியின் வீட்டில் 10.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

காட்பாடியில் வியாபாரியின் வீட்டில் 10.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
காட்பாடி சோலை நகர் 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (60). இவர், காட்பாடி காவல் நிலையம் எதிரே எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சங்கர் குடும்பத்துடன் பெங்களூர் 
சென்றிருந்தார். 
செவ்வாய்க்கிழமை திரும்பி வந்துபார்த்த போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 
இதுகுறித்த புகாரின் பேரில் காட்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com