வேலூர்

குடிசை வீட்டில் தீ விபத்து

DIN

வேலூர் காகிதப்பட்டறை அருகே குடிசை வீடு தீயில் கருகி நாசமானது.
வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் சம்பத் (50) எலெக்ட்ரீஷியன். இவர், வெள்ளிக்கிழமை தனது குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றார். அவரது தாய் முனியம்மா பெங்களூரு வீட்டில் இருந்தார்.
இந்நிலையில், முனியம்மா சனிக்கிழமை மதியம் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றாராம். அப்போது, மாடிவீட்டின் மேல் உள்ள குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வர தாமதமானதை அடுத்து பொதுமக்களை தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் குடிசை வீடு முழுவதுமாக எரிந்து நாசமானது.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT