புரட்டாசி முதல் சனிக்கிழமை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, வேலூர் மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இ


புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, வேலூர் மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆம்பூர் கோயில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா நடைபெற்றது.
கோதண்டராம சுவாமி கோயிலில் புரட்டாசி விழாவையொட்டி, மூலவருக்கு அபிஷேகம்,  கோ பூஜை, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. நவ திருப்பதி தரிசன நிகழ்ச்சியில் நவ திருப்பதி உற்சவர்கள் அலங்காரக் காட்சி பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் வழங்கப்பட்டன.
ஆம்பூர் பெரிய ஆஞ்நேயர் கோயிலில் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. கோயிலில் உற்சவர் பிரகார உலா நடைபெற்றது.
மேலும், ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில், துத்திப்பட்டு பிந்து
மாதவர் கோயில், ரெட்டித்தோப்பு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், கம்பிக்கொல்லை வீர ஆஞ்சநேயர் கோயில், விண்ணமங்கலம் அமர்ந்த சுந்தராஜப் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
குடியாத்தத்தில்...
 புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, குடியாத்தம் கொண்டசமுத்திரம், புது தெருவில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் இருந்து லட்சுமி நரசிம்மர் வீதி உலா நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி வீதி உலா தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் மாலை கோயிலில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழு நிர்வாகிகள் கே.எம். நடராஜன், என். குமரவேல்,
என். பழனி ஆகியோர் செய்திருந்தனர்.
ஆற்காட்டில்...
 ஆற்காட்டை அடுத்த லாடவரம் கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த செளந்தரவல்லி கருமாணிக்கபெருமாள் கோயிலில், மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம்,  சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து  மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
ராணிப்பேட்டையில்...
 புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, வாலாஜாபேட்டை வரதராஜ பெருமாள் கோயில், திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு வைணவ தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com