தமிழ்நாடு மின் ஊழியர் பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருப்பத்தூர் கோட்டத்தின் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருப்பத்தூர் கோட்டத்தின் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திருப்பத்தூர் கோட்டத் தலைவர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் எம்.கோவிந்தராஜ் பேசினார். திருப்பத்தூர் வட்டத் நிர்வாகிகள் சி.அருள், சிவசீலன், ஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மின்சார வட்டம் 2018-ஐ பயன்படுத்தி மின்வாரியத்தைப் பிரிப்பதைப் பயன்படுத்தி மறு பரிசீலனை செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், கணக்கீட்டு பிரிவு ஊழியர் கணக்காளர் 1-இல் இருந்து கணக்கீட்டு ஆய்வாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோட்டத் தலைவராக கே.விஜயக்குமார், செயலாளராக 
டி.ஜெயபால், துணைத் தலைவர்களாக எஸ்.தண்டபாணி, ஜி.தருமன், துணைச் செயலாளர்களாக ஏ.முருகேசன், ஆர்.வெங்கடேசன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com