சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க கருணாஸ் எம்எல்ஏ கோரிக்கை

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸுக்கு முதல் வகுப்பு

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸுக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸாருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாகப் பேசியதாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டார். தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அவர் ஞாயிற்றுக்கிழமை மாலையே வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க வேண்டும் என அவரது சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சிறை அதிகாரிகள் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுப்படி கருணாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அனுமதி வழங்கினால் முதல் வகுப்பு அறையை ஒதுக்க முடியும் என்றனர்.
 இதனிடையே, கருணாஸின் மனைவி கிரேஸ் திங்கள்கிழமை காலை வேலூர் மத்திய சிறைக்கு வந்தார். அங்கு உரிய அனுமதி பெற்று கருணாஸை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்ததாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com