கருணாஸை  சந்தித்த டிடிவி  ஆதரவு எம்எல்ஏக்கள்

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ கருணாஸை டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ கருணாஸை டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்துப் பேசினர். 
போலீஸார் மற்றும் தமிழக முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியதாக எம்எல்ஏவும்,  முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி கிரேஸ் சிறையில் கருணாஸை திங்கள்கிழமை ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, வேலூர் மத்திய சிறையில் உள்ள கருணாஸை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களான பார்த்திபன் (சோளிங்கர்), ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்) ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து பேசினர். சுமார் அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:  சக சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையிலும், நாங்கள் வழக்குரைஞர்கள் என்ற முறையிலும் கருணாஸை சந்தித்துப் பேசினோம். மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை. எங்கள் தலைமையின் (டி.டி.வி. தினகரன்) அனுமதியுடன்தான் கருணாஸை சந்தித்தோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com