பாலாற்றில் கார் ஓட்டுநர் அடித்துக் கொலை

வேலூரில் பாலாற்றில் கார் ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

வேலூரில் பாலாற்றில் கார் ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரை அடுத்த காங்கேயநல்லூர் பாலாற்றில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் செவ்வாய்க்கிழமை காலை இறந்து கிடந்தார். 
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விருதம்பட்டு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, இறந்தவரின் முகம் கத்தி, பாட்டிலால் சிதைக்கப்பட்டிருந்ததுடன், அவரது வலது கையில் சரவணன், சரண்யா என பச்சை குத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், சடலத்தின் அருகே முட்புதரில் ரத்தக்
கறையுடன் 2 வாழைத்தண்டுகளும், உடைந்த பாட்டில்களும் கிடந்துள்ளன. இளைஞர் சடலத்தின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்லிடப்பேசியைக் கைப்பற்றி போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இறந்தவர் வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிச்சைபெருமாள் (32) என்பதும், கார் ஓட்டுநரான இவர் மீது காவல் நிலையங்களில் நகைப் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. 
மேலும், இவர், ரௌடி வசூர் ராஜாவின் கூட்டாளி என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, பிச்சைபெருமாளின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸார், வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com