திடக்கழிவு மேலாண்மை குறித்து 5 நகராட்சிகளின் பணியாளர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகராட்சி மேலாளர் பாஸ்கர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நகராட்சிகளின் துப்புரவுப் பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். துப்புரவு அலுவலர்கள் எம்.பாஸ்கர் (ஆம்பூர்), ராஜரத்தினம் (திருப்பத்தூர்), துப்புரவு ஆய்வாளர்கள் உமாசங்கர் (ஜோலார்பேட்டை), சுப்பிரமணியன் (ஆம்பூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.