அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை மண்டலப் பயிற்சி மையத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சிஐஎஸ்எஃப், சென்னை, வேளச்சேரி அரிமா சங்கம் இணைந்து நடத்திய இந்த ரத்த தான முகாமுக்கு, மையத்தின் முதல்வரும் டிஐஜியுமான வினய்கஜ்லா தலைமை வகித்தார். முகாமை சிஐஎஸ்எஃப் துணைத் தலைவர் (மருத்துவப் பிரிவு) முகேஷ் சக்சேனா தொடங்கி வைத்தார்.
இதில், டிஐஜி (மருத்துவப் பிரிவு) சேகர் ஜஸ்வால், துணை கமாண்டன்ட் ராஜேந்தர், உதவி கமாண்டன்ட் ராவ், மருத்துவ அலுவலர் நித்தியானந்தா, மருத்துவர்கள் ஜெயகுமரேசன், சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் 150-க்கும் மேற்பட்ட படைவீரர்கள் ரத்த தானம் அளித்தனர்.