வேலூர்

கல்வி நிலையங்களில் பொங்கல் விழா

DIN

வேலூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
காட்பாடி செஞ்சிலுவை சங்கம் சார்பில் தைப்பொங்கல் விழா காட்பாடி அருகே செங்குட்டையில் செயல்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சங்கக் கிளையின் அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன் தலைமை  வகித்தார். குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளர் கே.எ.சாந்தி, செஞ்சிலுவை சங்க கிளை செயலர்
செ.நா.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.இ.லட்சுமிநாராயணன், டி.வி.எஸ்.லட்சுமிகுமாரி, கண் தானம் செய்த சி.சரோஜா, செ.ந.நாகலிங்கஆச்சாரி ஆகியோருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மு.சிலுப்பன் விருதுகள் வழங்கி கெளரவித்தார். தொடர்ந்து, காப்பக மாணவியருக்கு போர்வைகள், தண்ணீர் பக்கெட் உள்ளிட்ட உதவிப் பொருள்களை வேலூர் வட்டாட்சியர் ரமேஷ் வழங்கினார். 
முன்னதாக, காப்பக குழந்தைகள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். செஞ்சிலுவை சங்க கிளை பொருளாளர் வி.பழனி, இணை செயலர் ஆர்.விஜயகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூரில்....
திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்கள், வேலூர் சிஎம்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட போர்வைகள், கரும்பு, பராமரிப்பு திங்கள்கிழமை நிதி உதவிகள் வழங்கப்பட்டன. 
நிகழ்ச்சிக்கு ஓய்வூதியம் பெறுவோர் சங்க மாநில நிர்வாகி ராஜகோபால் தலைமை வகித்தார். அமைப்பின் செயலர் ரமேஷ் வரவேற்றார். வேலூர் உதவும் உள்ளங்கள் அமைப்பின் புரவலர் பெருமாள் கலந்துகொண்டார்.
கல்வி நிறுவனங்களில்...
திருப்பத்தூர் பொதிகை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு நிறுவனத் தலைவர் கணேஷ்மல் தலைமை வகித்தார். செயலர் எழிலரசன், பொருளாளர் ஏலகிரி செல்வம், ஆசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இருமத்தூரில் உள்ள ஐவிஎல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பள்ளியின் தாளாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜேஸ்வரி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். அதேபோல், திருப்பத்தூர் ஐடிஐ, குட்வில் மெட்ரிக் பள்ளி, விஜயசாந்தி மெட்ரிக் பள்ளிகளிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் விநாயகபுரத்தில் உள்ள பாரதியார் தெருவில் குடியிருப்புவாசிகள் சார்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில்  பொதுமக்கள் கலந்துகொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரியபகவானுக்கு படையலிட்டு வழிபட்டனர்.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை விஸ்வாஸ் மன வளர்ச்சிக் குன்றிய மாணவர்கள் பள்ளியில்  நடைபெற்ற விழாவுக்கு அமைப்பின் செயலர் ஆர்.எஸ்.ஜெயின் தலைமை வகித்து 100 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பொருள்களை வழங்கினார். 
ஆம்பூரில்...
ஆம்பூர் ஏ-கஸ்பா அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவுக்கு, பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஆர். வெங்கடேசன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் குமரகுருபாரதி வரவேற்றார்.  ஆசிரியர்கள் தென்னரசு, சீனிவாசன், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆற்காட்டில்...
ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, பள்ளியின் தலைவர் எஸ்.ஆர்.ஈஸ்வரப்பன் தலைமை வகித்தார். செயலர் கே.சொல்முத்தழகன், பொருளாளர் மா.ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர். 
முதியோர் இல்லத்தில்...
ஆற்காடு செய்யாறு  புறவழிச்சாலையில் உள்ள மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் நடைபெற்ற  விழாவுக்கு, முதியோர் இல்லத்தின் தலைவர் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தார். செயலர் ஒய்.அக்பர் ஷெரீப்  முன்னிலை வகித்தார். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமி ஆகியோர் அருளாசி வழங்கினர். வேலூர் சரக  காவல் துறை துணைத் தலைவர் வி.வனிதா, பச்சையப்பா சில்க்ஸ் டி.பச்சையப்பன்பிரபு ஆகியோர் முதியோருக்கு  புத்தாடைகள் வழங்கிப் பேசினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT