பைக் மீது லாரி மோதல்: இரு தொழிலாளர்கள் சாவு

சோளிங்கர் அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சோளிங்கர் அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டையை அடுத்த வங்கனூரைச் சேர்ந்தவர் தென்னரசு (28). இப்பகுதிக்கு அருகே உள்ள சிஜிஎன் கண்டிகையைச் சேர்ந்தவர் கோபி (எ) இப்ராஹிம் (38). இருவரும் பெங்களூருவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். பொங்கல் விடுமுறைக்கு வந்த இருவரும் விடுமுறை முடிந்து மோட்டார் சைக்கிளில் பெங்களூருவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டனர். பெருங்காஞ்சி ஏரிக்கரை அருகே சோளிங்கர் நோக்கி வந்த ஒரு லாரி, அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொண்டபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com