ஆற்காடு நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஆற்காடு நகராட்சிஆணையர் ஷகிலா தலைமையில் சுகாதார ஆய்வாளர் அப்துல் ரஹீம் உள்ளிட்ட
அதிகாரிகள் பேருந்து நிலையம், அண்ணாசாலை, ஷா காஞ்சிபஜார், கலவை சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.