இன்று 251-ஆவது திருமுறை வழிபாடு

குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில், வீடுகளில் மாதந்தோறும் நடைபெற்று வந்த திருமுறைச் சொற்பொழிவின் 251- ஆவது நிகழ்வு


குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில், வீடுகளில் மாதந்தோறும் நடைபெற்று வந்த திருமுறைச் சொற்பொழிவின் 251- ஆவது நிகழ்வு நடுப்பேட்டை காசி விஸ்வநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த அமைப்பு சார்பில் மாதந்தோறும் ஒரு இல்லம் என 250 இல்லங்களில் திருமுறைச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 251- ஆவது நிகழ்வு காசி விஸ்வநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், 5 மணிக்கு திருமுறை வழிபாடு நடத்திய அடியார்களை கௌரவித்தல், 5.30 மணிக்கு திருத்தணி எம். சுவாமிநாதன் குழுவினரின் திருமுறைப் பண்ணிசை, அதைத் தொடர்ந்து சென்னை ஞானத் திரள்' மாத இதழ் ஆசிரியர் கி.சிவக்குமார் குழுவினரின் திருமுறை விளக்க உரை ஆகியவை நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை அமைப்பின் நிர்வாகிகள் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு, எஸ்.அசோக்குமார், கோ.வீரய்யபத்தர், எம்.வாசுதேவன், எம்.டி.சதானந்தம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com