அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி: முதல்வர் பழனிசாமி

அதிமுக அமைத்துள்ள மெகா கூட்டணி மட்டுமே வெற்றிக் கூட்டணி என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.


அதிமுக அமைத்துள்ள மெகா கூட்டணி மட்டுமே வெற்றிக் கூட்டணி என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அருகில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்தி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
 நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக திமுகவி பொய்யான வாக்குறுதி அளித்தது. ஆட்சியில் நாம் உள்ளோம், ஆனால் அவர்கள் கடன் தள்ளுபடி செய்கிறோம் என்கிறார்கள். நமது கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ள வாக்குறுதிகள் முத்தான வாக்குறுதிகள். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வேண்டும் என்றே பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. திருவண்ணாமலை தொகுதியில் அதிமுகவை வெற்றி பெற வைத்தால், வளர்ச்சிக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும். புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்படும். திமுக கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இடம் பெற்றிருந்தது. இதுவரை தமிழகத்துக்கு குறிப்பாக திருவண்ணாமலை தொகுதிக்கென்று எந்த ஒரு முன்னேற்றத்தையும், வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது அமைந்துள்ள கூட்டணி மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என ஒத்த கருத்துள்ள கூட்டணி. அண்மையில் இந்தியா டுடே பத்திரிகை ஆய்வில் இந்தியாவிலேயே தமிழகம் சட்டம்-ஒழுங்கில் முதலிடம் வகிக்கிறது என சான்றிதழ் அளித்துள்ளது.
நீர் மேலாண்மை திட்டம் 4 ஓய்வுபெற்ற தலைமை ஊழியர்களை நியமித்து உபரிநீரை விவசாயத்துக்குச் வழங்கப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில்தான் பெரும்பாலான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் தடுப்பணைகள் கட்டப்படவில்லை. தற்போது விவசாயிகள் வளம் பெற வண்டல் மண் இலவசமாக அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் பல முதலீட்டாளர்கள் தொழிற்சாலைகளைத் திறக்க முன் வருகின்றனர். திமுகவினர் அமைத்துள்ள கூட்டணி கொள்கையில்லா கூட்டணியாகும்.
நீண்டகால கோரிக்கையான 
காவிரி-கோதாவரியை இணைக்க கடுமையாக முயற்சிப்போம் என்றார் அவர்.
மாநில வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து திருப்பத்தூர் பேருந்து நிலையம், ஆசிரியர் நகர், ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com