கோயம்புத்தூர்

எஸ்டேட் பகுதியில் மளிகைக் கடையை சேதப்படுத்திய யானைகள்

DIN

எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைகள் அங்குள்ள மளிகைக் கடையை சேதப்படுத்திச் சென்றன.
வால்பாறை எஸ்டேட் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே யானைகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இரவு நேரத்தில் மட்டும் சேதங்களை ஏற்படுத்திவரும் யானைகளை விரட்ட முடியாமல் வனத் துறையினர் தவித்து வருகின்றனர். 
இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட்  பங்களா டிவிஷன் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த 6 யானைகள் அங்குள்ள தாமஸ் என்பருக்குச் சொந்தமான மளிகைக் கடையின் சுவரை முட்டி தள்ளின. 
இதில், சுவர்கள் முழுவதும் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. கடைக்குள் இருந்த ஏராளமான மளிகைப் பொருள்களும் சேதமாகியுள்ளன. 
இதுறித்து தகவல் அறிந்த வனத் துறையினர் அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT