கோவை, பீளமேட்டில் முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 4.5 பவுன் நகையை மர்ம நபர்கள் புதன்கிழமை பறித்துச் சென்றனர்.
கோவை, பீளமேடு வெற்றிலைக்கார வீதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி சரோஜினி (70). இவர் வீட்டின்அருகே புதன்கிழமை நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சரோஜினியிடம் முகவரி கேட்டு அவரது கவனத்தை திசை திருப்பியுள்ளனர். பின்னர் அவர் எதிர்பாராத வேளையில் கழுத்தில் இருந்த 4.5 பவுன் நகையைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.