கோவை மாவட்ட மைய நூலகத்தில் 51ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு மகளிருக்கான இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை (நவம்பர் 15) நடைபெறுகிறது.
கோவை மாவட்ட மைய நூலகத்தில் 15ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை தேசிய நூலக வார விழா நடைபெற உள்ளது. இதையடுத்து ராவ் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்படும் முகாமில் மருத்துவர் அ.ரஷிதா கலந்து கொண்டு மகளிருக்கான இலவச மருத்துவப் பரிசோதனை, ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் வாசகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட மைய நூலகர் பே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.