கோயம்புத்தூர்

சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி சாவு

DIN

கோவை மாவட்டம், வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி சனிக்கிழமை உயிரிழந்தது.
வால்பாறை நகர் பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடுவதாகப் பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை, வாழைத் தோட்டம் பகுதிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வந்த சிறுத்தை, மீனா என்பவருக்குச் சொந்தமான 2 வயது கன்றுக் குட்டியை கடித்துக் கொன்று, அதன் உடலை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் போட்டுச் சென்றது. 
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT